» செய்திகள் - விளையாட்டு » உலகம்

டென்மார்க் வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் பலி!!

செவ்வாய் 5, ஜூலை 2022 12:04:39 PM (IST)



டென்மார்க்கில் வணிக வளாகம் ஒன்றில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானவர்கள் படுகாயம் அடைந்தனர். 

டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் நகரில் விமான நிலையம் அருகே உள்ள வணிக வளாகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்ட வேளையில் திடீரென துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. வணிக வளாகத்திற்கு வந்த இருவர் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சரமாரியாக சுட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள் வணிக வளாகத்தில் இருந்து அலறி அடித்துக் கொண்டு வெளியேறின\ர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், வணிக வளாகத்தை சுற்றி வளைத்தனர். முழு நேர கடுமையான போராட்டத்திற்கு பிறகு துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர் பிடிபட்டார். இந்த துப்பாக்கிச் சூட்டில் வணிக வளாகத்தில் இருந்த 3 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானவர்கள் படுகாயம் அடைந்தனர். 22 வயது நிரம்பிய இளைஞர் துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான காரணம் என்ன, பயங்கரவாத தொடர்பு இருப்பதா என்பது பற்றி டென்மார்க் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory