» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
சபரிமலை சன்னிதானம் மீது தாழ்வாகப் பறந்த ஹெலிகாப்டர்: கடலோர காவல் படை விளக்கம்!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 8:49:17 PM (IST)
சபரிமலை அய்யப்பன் கோவில் சன்னிதானத்தின் மேல் பகுதியில் கடலோர பாதுகாப்புப் படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் மிகவும் தாழ்வாகப் பறந்த சம்பவம் கேரளா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உயர் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள சபரிமலை சன்னிதானத்தின் கொடிமரத்திற்கு மிக அருகில், நேற்று பகல் நேரத்தில் ஹெலிகாப்டர் ஒன்று சுமார் 30 வினாடிகள் வட்டமிட்டுள்ளது. கருவறைக்கு மிக அருகில் தாழ்வாகப் பறந்த அந்த ஹெலிகாப்டரில் இருந்த ஒருவர், கோவிலின் காட்சிகளைத் தனது கேமராவில் பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது. சபரிமலை வரலாற்றில் இவ்வளவு தாழ்வாக ஹெலிகாப்டர் பறப்பது இதுவே முதல் முறையாகும்.
இந்தச் சம்பவம் பாதுகாப்பு விதிமீறலாகக் கருதப்படுவதால், இது குறித்து விசாரணை நடத்த உடனடியாக உத்தரவிடப்பட்டது. கேரள உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு ஆணையர் ஜெயகிருஷ்ணன், சபரிமலை பாதுகாப்புப் பொறுப்பாளரான ஏ.டி.ஜி.பி. ஸ்ரீஜித்திடம் இது குறித்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
கடலோர காவல் படை விளக்கம்: பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் குறித்து கடலோர காவல் படை (Coast Guard) அளித்துள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது: "சிஜி821 (CG821) என்ற அந்த ஹெலிகாப்டர் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. அப்போது 6,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது, வானிலை திடீரென மோசமடைந்து மேகமூட்டமாகக் காணப்பட்டது. இதனால் திசைமாறிய ஹெலிகாப்டர் எதிர்பாராதவிதமாகச் சபரிமலைப் பகுதிக்குச் சென்றது. வானிலை சீரானதும் உடனடியாகத் தளம் திரும்பியது."
பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு: இருப்பினும், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி மற்றும் வழிபாட்டுத் தலம் மீது இவ்வளவு தாழ்வாகப் பறந்தது ஏன் என்பது குறித்துப் பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சன்னிதானத்தில் எப்போதும் போலீஸ் பாதுகாப்பு இருக்கும் நிலையில், இந்தச் சம்பவம் கேரளாவில் விவாதப் பொருளாகியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள விஜய்க்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!
ஞாயிறு 10, மே 2026 8:48:44 PM (IST)

திருப்பதியில் குடும்பத்துடன் வருபவர்களுக்கு மட்டுமே அறைகள் ஒதுக்கீடு - தேவஸ்தானம் அறிவிப்பு!
ஞாயிறு 10, மே 2026 8:42:50 PM (IST)

அனில் அம்பானி குழுமம் ரூ.27,000 கோடி மோசடி: சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
சனி 9, மே 2026 5:10:44 PM (IST)

விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்க கோரி மனுதாக்கல் : ஆளுநருக்கு உத்தரவிடுமா உச்சநீதிமன்றம்?
சனி 9, மே 2026 3:53:28 PM (IST)

மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பொறுப்பேற்பு : பிரதமர் மோடி வாழ்த்து!
சனி 9, மே 2026 11:38:29 AM (IST)

ஐ.டி., ஊழியர்கள் கட்டாய மதமாற்றம்: தலைமறைவு குற்றவாளி நிடா கான் கைது
சனி 9, மே 2026 11:35:05 AM (IST)










