» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பயங்கரவாதத்திற்கு இந்தியா அடிபணியாது: பஹல்காம் தாக்குதல் நினைவு நாளில் பிரதமர் அஞ்சலி
புதன் 22, ஏப்ரல் 2026 12:50:25 PM (IST)
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்று ஓராண்டு நிறைவடைந்த நிலையில் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் கடந்த ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. பஹல்காமின் பைசாரன் பள்ளத்தாக்கில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இந்த பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர்.பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பினர் இந்த தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது.
இந்நிலையில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்று ஓராண்டு நிறைவடைந்த நிலையில் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், பஹல்காமில் கடந்த ஆண்டு இதேநாளில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவில் கொள்கிறேன். அவர்கள் ஒருபோதும் மறக்கப்பட மாட்டார்கள். தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நினைவில் வாழும் குடும்பத்தினருடன் நான் துணை நிற்கிறேன். இந்த துக்கத்தில் நாடு ஒன்றாக நிற்கிறது. பயங்கரவாதத்திற்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது. பயங்கரவாதம் ஒருபோதும் வெற்றிபெறாது இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள விஜய்க்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!
ஞாயிறு 10, மே 2026 8:48:44 PM (IST)

திருப்பதியில் குடும்பத்துடன் வருபவர்களுக்கு மட்டுமே அறைகள் ஒதுக்கீடு - தேவஸ்தானம் அறிவிப்பு!
ஞாயிறு 10, மே 2026 8:42:50 PM (IST)

அனில் அம்பானி குழுமம் ரூ.27,000 கோடி மோசடி: சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
சனி 9, மே 2026 5:10:44 PM (IST)

விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்க கோரி மனுதாக்கல் : ஆளுநருக்கு உத்தரவிடுமா உச்சநீதிமன்றம்?
சனி 9, மே 2026 3:53:28 PM (IST)

மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பொறுப்பேற்பு : பிரதமர் மோடி வாழ்த்து!
சனி 9, மே 2026 11:38:29 AM (IST)

ஐ.டி., ஊழியர்கள் கட்டாய மதமாற்றம்: தலைமறைவு குற்றவாளி நிடா கான் கைது
சனி 9, மே 2026 11:35:05 AM (IST)










