» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தெலங்கானாவில் கோர விபத்து: லாரி மீது கார் மோதியதில் 6 பேர் உயிரிழப்பு!

வியாழன் 25, ஏப்ரல் 2024 11:18:46 AM (IST)

ஹைதராபாத் அருகே நின்று கொண்டிருந்த டிரக் மீது கார் மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர்.

தெலங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாத்தில் இருந்து 180 கிமீ தொலைவில் உள்ள சூர்யாபேட்டை மாவட்டம் கோடாட் நகருக்கு அருகே ஹைதராபாத்-விஜயவாடா நெடுஞ்சாலையில் பழுது காரணமாக சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த டிரக் மீது வியாழக்கிழமை அதிகாலை ஓட்டுநர் உள்பட 10 பேருடன் வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. 

இதில், கார் பயணித்த ஒரு பெண் குழந்தை உட்பட 6 பேர் பலியாகினர். 4 பேர் லேசான காயங்களுடன் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த  கோடாட் டிஎஸ்பி ஸ்ரீதர் ரெட்டி மற்றும் காவல் துறையினர் சடலங்களை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory