» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தெலங்கானாவில் கோர விபத்து: லாரி மீது கார் மோதியதில் 6 பேர் உயிரிழப்பு!
வியாழன் 25, ஏப்ரல் 2024 11:18:46 AM (IST)
ஹைதராபாத் அருகே நின்று கொண்டிருந்த டிரக் மீது கார் மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர்.
தெலங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாத்தில் இருந்து 180 கிமீ தொலைவில் உள்ள சூர்யாபேட்டை மாவட்டம் கோடாட் நகருக்கு அருகே ஹைதராபாத்-விஜயவாடா நெடுஞ்சாலையில் பழுது காரணமாக சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த டிரக் மீது வியாழக்கிழமை அதிகாலை ஓட்டுநர் உள்பட 10 பேருடன் வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், கார் பயணித்த ஒரு பெண் குழந்தை உட்பட 6 பேர் பலியாகினர். 4 பேர் லேசான காயங்களுடன் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கோடாட் டிஎஸ்பி ஸ்ரீதர் ரெட்டி மற்றும் காவல் துறையினர் சடலங்களை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.