» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்தியாவை உடைக்க பிரிவினையை காங்கிரஸ் உருவாக்குகிறது:- அமித்ஷா குற்றச்சாட்டு!!

வியாழன் 11, ஏப்ரல் 2024 11:39:24 AM (IST)



இந்தியாவை உடைக்க வடக்கு-தெற்கு பிரிவினையை காங்கிரஸ் கட்சி உருவாக்குகிறது என்று மத்திய உள்துறை அமைச்சர்அமித் ஷா குற்றம்சாட்டினார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று பீகார் மாநிலத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். கயா மாவட்டத்தின் குராரு பகுதியில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசிய அவர், "காங்கிரஸ் கட்சியும், ராஷ்ட்ரீய ஜனதா தளமும் திருப்திபடுத்தும் அரசியலில் ஈடுபட்டு உள்ளன. அதனால்தான் காங்கிரசுக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் 370-வது சட்டப்பிரிவை நீக்கியதை எதிர்த்து வருகின்றன. 

இந்தியாவை உடைக்க வடக்கு-தெற்கு பிரிவினையை காங்கிரஸ் கட்சி உருவாக்குகிறது. அதன் தலைவர் ராகுல் காந்தியும் இந்த விவகாரத்தில் மவுனம் சாதிக்கிறார். ஆனால் காங்கிரசின் இந்த திட்டத்தை தேசிய ஜனநாயக கூட்டணியும், நாட்டு மக்களும் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள்.

இத்தகைய பிரிவினை சக்திகளுக்கு நாடாளுமன்ற தேர்தலில் தகுந்த பதிலடி கொடுக்க நாட்டு மக்கள் தயாராகி விட்டார்கள். அத்துடன் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 400-க்கு மேற்பட்ட இடங்களை உறுதி செய்வார்கள். அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படுவதை காங்கிரஸ் ஒருபோதும் விரும்பவில்லை. பீகார் முன்னாள் முதல்-மந்திரி கர்பூரி தாகூருக்கு பாரத ரத்னா வழங்கவும் நடவடிக்கை எடுக்கவில்லை" என்று அமித்ஷா கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory