» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சிறுவனிடம் பாலியல் அத்துமீறல் - போக்சோவில் கைதான தலைமை காவலர் அதிரடி பணிநீக்கம்!
சனி 30, மே 2026 10:58:28 AM (IST)
சென்னையில் 11-ஆம் வகுப்பு மாணவனிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட தலைமை காவலரை, பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கம் செய்து சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த 16 வயது சிறுவன் (11-ஆம் வகுப்பு மாணவன்), கடந்த 25ஆம் தேதி தனது பெற்றோருடன் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள உறவினரான குமரேசன் (39) என்பவரது வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் பெற்றோர் சொந்த ஊருக்குத் திரும்பிய நிலையில், சிறுவன் மட்டும் உறவினர் வீட்டில் 2 நாட்கள் தங்கியிருந்து சென்னை நகரைச் சுற்றிப் பார்ப்பதாகக் கூறியதால், பெற்றோர் அவனை மட்டும் அங்கு விட்டுச் சென்றுள்ளனர்.இதனைத் தொடர்ந்து, கடந்த 27ஆம் தேதி இரவு குமரேசன், தனது நண்பரான சென்னை வடபழனி காவல் நிலைய குற்றப்பிரிவில் தலைமை காவலராகப் பணிபுரிந்து வந்த வேலப்பன் (35) என்பவரை வீட்டிற்கு அழைத்து வந்து ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளார்.
அப்போது போதை தலைக்கேறிய நிலையில் இருந்த தலைமை காவலர் வேலப்பன், அருகில் தூங்கிக் கொண்டிருந்த சிறுவனை வலுக்கட்டாயமாக எழுப்பி, அவனது வாயில் மதுவை ஊற்றியுள்ளார். அதோடு நிறுத்தாமல், அச்சிறுவனுக்குக் கடுமையான பாலியல் தொந்தரவும் கொடுத்துள்ளார்.
ரிமோட்டால் தாக்கிவிட்டு தப்பிய சிறுவன்:
இதனால் பயமும் அதிர்ச்சியும் அடைந்த சிறுவன் கூச்சலிட்டு அலறியுள்ளான். மேலும், சாமர்த்தியமாக அருகில் இருந்த டிவி ரிமோட்டை எடுத்து தலைமை காவலர் வேலப்பனின் தலையில் ஓங்கித் தாக்கியுள்ளான். வேலப்பன் நிலைதடுமாறிய நேரத்தில், சிறுவன் வீட்டை விட்டு வெளியே ஓடிவந்து, கதவை வெளிப்புறமாகப் பூட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடினான்.
நேராக அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குச் சென்ற சிறுவன், தனக்கு நேர்ந்த கொடூரத்தைச் சொல்லி போலீஸாரிடம் கதறி அழுதுள்ளான். சிறுவனின் புகாரைத் தொடர்ந்து போலீஸார் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, வீட்டிற்குள் பூட்டிக்கிடந்த வேலப்பனை மீட்டு காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர்.
போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சிறுவன் கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, தலைமை காவலர் வேலப்பன் மீது போக்சோ (POCSO) உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, நேற்று முன்தினம் அவரைக் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து அவர் உடனடியாக சஸ்பெண்ட் (பணியிடை நீக்கம்) செய்யப்பட்டார். இந்நிலையில், காவல் துறைக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட வேலப்பனை பணியில் இருந்து நிரந்தரமாகப் பணிநீக்கம் செய்து சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் இன்று அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
மக்கள் கருத்து
Babuமே 30, 2026 - 12:49:21 PM | Posted IP 172.7*****
super good action
Babuமே 30, 2026 - 12:49:07 PM | Posted IP 172.7*****
tasmac labottel ku extra panam vangura naikala yepo intha mathiri pana poranga nan extra vangura naikala solren ana yevan than vangama irukan
மேலும் தொடரும் செய்திகள்

ஆலங்குளம் அருகே 6 பேருக்கு அரிவாள் வெட்டு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!
சனி 30, மே 2026 5:23:02 PM (IST)

வட மாநிலத்தவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கல் - அமைச்சர் மரிய வில்சன் தகவல்!
சனி 30, மே 2026 4:21:11 PM (IST)

ஜூன் 1 முதல் அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க அரசு ஆணை: குமரி மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி!
சனி 30, மே 2026 4:02:42 PM (IST)

எம்எல்ஏக்களை விலைபேசும் தவெக: குதிரை பேரத்தை தடுக்க ஆளுநரிடம் அதிமுக அவசர மனு!
சனி 30, மே 2026 3:46:21 PM (IST)

நடிகர் அஜித் குமாரின் தாயார் மோகினி மறைவு : முதல்வர் ஜோசப் விஜய் இரங்கல்
சனி 30, மே 2026 11:57:20 AM (IST)

கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்ல அனுமதி : அனிதா கருத்துக்கு மனோ தங்கராஜ் எதிர்ப்பு!
சனி 30, மே 2026 11:33:26 AM (IST)











muthuமே 30, 2026 - 08:03:17 PM | Posted IP 104.2*****