» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஏப். 17 முதல் கோடை விடுமுறை: மாணவர்கள், பெற்றோர்களுக்கான முக்கிய அறிவுறுத்தல்கள்!

வியாழன் 16, ஏப்ரல் 2026 11:14:02 AM (IST)

தமிழகப் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்குக் கோடை விடுமுறை நாளை (ஏப். 17) முதல் தொடங்குகிறது.

ஜூன் 1-ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், இந்த விடுமுறை நாட்களை மாணவர்கள் பாதுகாப்பாகவும் பயனுள்ளதாகவும் கழிக்கப் பெற்றோர்களுக்குப் பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

பாதுகாப்பு மற்றும் உடல்நலன் குறித்த வழிகாட்டுதல்கள்:

நீர்நிலைகள்: விடுமுறை நாட்களில் மாணவர்கள் கடல், ஆறு, ஏரி, குளம் மற்றும் குட்டை போன்ற நீர்நிலைகளில் குளிப்பதைப் பெற்றோர் அனுமதிக்க வேண்டாம்.

வெப்பத்தைத் தடுத்தல்: கோடை வெப்பம் அதிகமாக இருப்பதால், பகல் நேரத்தில் வெளியே செல்வதையும் விளையாடுவதையும் தவிர்க்க வேண்டும். வெளிப்புற விளையாட்டுகளின் போது மாணவர்கள் அதிகளவு தண்ணீர் அருந்துவதை உறுதி செய்ய வேண்டும்.

சமச்சீரான உணவு: மாணவர்களின் வளர்ச்சிக்குத் தேவையான பாரம்பரிய உணவுகள் மற்றும் கோடை காலத்திற்கு ஏற்ற பழ வகைகளை வழங்க வேண்டும்.

சுத்தம்: தினமும் இருவேளை பல் துலக்குதல் மற்றும் குளித்தல் போன்ற சுகாதாரமான பழக்கங்களை ஊக்குவிக்க வேண்டும்.

மனநலன் மற்றும் சமூகத் தொடர்புகள்:

டிஜிட்டல் தவிர்ப்பு: தொலைக்காட்சி மற்றும் செல்போன் பார்ப்பதில் அதிக நேரத்தைச் செலவிடுவதைத் தவிர்க்க அறிவுறுத்த வேண்டும்.

சமூகத் தொடர்பு: தனிமை உணர்வைத் தடுக்க நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சேர்ந்து விளையாடுதல், இசை கேட்டல் போன்ற செயல்பாடுகள் மூலம் சமூகத் தொடர்புகளை ஊக்குவிக்க வேண்டும்.

திறன் மேம்பாடு மற்றும் கற்றல்:

வாசிப்புப் பழக்கம்: மாணவர்களை அருகில் உள்ள பொது நூலகங்களுக்கு அழைத்துச் சென்று, நாள்தோறும் ஒரு மணி நேரமாவது புத்தகங்களைப் படிக்க ஊக்குவிக்க வேண்டும். அவர்களின் ஆர்வத்திற்கேற்ப கதைகள், பொது அறிவு நூல்கள் மற்றும் நீதி நூல்களை அறிமுகப்படுத்தலாம்.

கலை ஆர்வம்: இசை, நடனம், ஓவியம் போன்றவற்றில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு அந்தத் துறைகளில் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தித் தர வேண்டும்.

நற்பண்புகள்: பெரியோர்களை மதிக்கவும், அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யவும் மாணவர்களைப் பழக்கப்படுத்த வேண்டும் எனப் பள்ளிக்கல்வித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital





Thoothukudi Business Directory