» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பிளஸ்-1 மாணவியை கடத்திய வாலிபருக்கு 5 ஆண்டு சிறை: நெல்லை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
வியாழன் 19, ஜூன் 2025 8:50:50 AM (IST)
நெல்லை அருகே பிளஸ்-1 மாணவியை கடத்திய வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து நெல்லை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
நெல்லை அருகே பிராஞ்சேரி ஆதிதிராவிடர் கீழ தெருவைச் சேர்ந்தவர் ஆத்தியப்பன். இவருடைய மகன் சீதாராமன் (31). கட்டிட தொழிலாளியான இவர் கடந்த 2019-ம் ஆண்டு பிளஸ்-1 மாணவியை ஆசைவார்த்தை கூறி பஸ்சில் கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில், முன்னீர்பள்ளம் போலீசார் கடத்தல் மற்றும் போக்சோ வழக்குப்பதிவு செய்து சீதாராமனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நெல்லை போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. நேற்று இந்த வழக்கு நீதிபதி சுரேஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இதில் குற்றம் சாட்டப்பட்ட சீதாராமன் பள்ளி மாணவியை கடத்தியது மட்டும் நிரூபிக்கப்பட்டதால், அந்த குற்றத்திற்காக 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவு பிறப்பித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் நீதிபதி உஷா ஆஜரானார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எஸ்ஐஆர் படிவங்களைப் பெறும் பணி நிறைவு: டிச.19-ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!
திங்கள் 15, டிசம்பர் 2025 10:47:13 AM (IST)

நாகர்கோவில் அருகே சாலை மையத்தடுப்பில் மோதி கவிழ்ந்த ஆம்னி பஸ்; 13 பேர் காயம்
திங்கள் 15, டிசம்பர் 2025 7:46:19 AM (IST)

ஈரோட்டில் தவெக தலைவா் விஜய் தேர்தல் பிரசார கூட்டத்துக்கு அனுமதி
ஞாயிறு 14, டிசம்பர் 2025 7:18:40 PM (IST)

தென்காசியில் மக்கள் நீதிமன்றம்: ரூ. 5 கோடி மதிப்புள்ள வழக்குகளுக்கு தீர்வு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 11:07:49 AM (IST)

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நாளை புதிய வாக்காளர் பெயர் சேர்க்கும் முகாம்!
சனி 13, டிசம்பர் 2025 5:55:15 PM (IST)

தமிழகத்தில் 2 நாட்களுக்கு குளிர் அதிகரிக்கும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
சனி 13, டிசம்பர் 2025 5:50:12 PM (IST)










