» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பிளஸ்-1 மாணவியை கடத்திய வாலிபருக்கு 5 ஆண்டு சிறை: நெல்லை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

வியாழன் 19, ஜூன் 2025 8:50:50 AM (IST)

நெல்லை அருகே பிளஸ்-1 மாணவியை கடத்திய வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து நெல்லை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

நெல்லை அருகே பிராஞ்சேரி ஆதிதிராவிடர் கீழ தெருவைச் சேர்ந்தவர் ஆத்தியப்பன். இவருடைய மகன் சீதாராமன் (31). கட்டிட தொழிலாளியான இவர் கடந்த 2019-ம் ஆண்டு பிளஸ்-1 மாணவியை ஆசைவார்த்தை கூறி பஸ்சில் கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில், முன்னீர்பள்ளம் போலீசார் கடத்தல் மற்றும் போக்சோ வழக்குப்பதிவு செய்து சீதாராமனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நெல்லை போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. நேற்று இந்த வழக்கு நீதிபதி சுரேஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இதில் குற்றம் சாட்டப்பட்ட சீதாராமன் பள்ளி மாணவியை கடத்தியது மட்டும் நிரூபிக்கப்பட்டதால், அந்த குற்றத்திற்காக 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவு பிறப்பித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் நீதிபதி உஷா ஆஜரானார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital

CSC Computer Education




Thoothukudi Business Directory