» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பாளையங்கோட்டையில் தேசிய சிந்தனைப் பேரவை சார்பில் நெல்லை படைப்பாளர்கள் சங்கமம்

புதன் 18, ஜூன் 2025 7:45:06 PM (IST)



பாளையங்கோட்டையில் தேசிய சிந்தனைப் பேரவை சார்பில் நெல்லை படைப்பாளர்கள் சங்கமம் பாலபாக்யா ஹாலில் நடந்தது.

தேசிய நல்லாசிரியர் சு. செல்லப்பா தலைமை வகித்தார்.  சமூக சேவகர் வெங்கடராமன் முன்னிலை வகித்தார். தேசிய சிந்தனைப் பேரவையின் தென் தமிழக அமைப்பாளர் வெங்கடாசலபதி வரவேற்றார்.  பிரக்ஞா பிரவாஹ்  தென்பாரத அமைப்பாளர் விஸ்வநாதன், மூத்த பத்திரிக்கையாளர் செங்கோட்டை ஸ்ரீராம், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு ஆகியோர் வாழத்துரை வழங்கினர்.

கவிஞர் லெட்மிமணி வண்ணன் சிறப்புரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சி நாதனின் வாரிசுகள் ஹரிஹர சுப்பிரமணியன், ஹரி வாஞ்சி கோபால கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். தேசிய சிந்தனைப்பேரவை தமிழக அமைப்பாளர் முரளி அறிமுக உரை நிகழ்த்தினார். தேசிய சிந்தனைப் பேரவையின் நெல்லை  மாவட்ட அமைப்பாளர் இசக்கி நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital


New Shape Tailors

CSC Computer Education





Thoothukudi Business Directory