» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நாங்குநேரி அருகே 754 கிலோ கஞ்சா தீயிலிட்டு அழிப்பு : காவல்துறை நடவடிக்கை
ஞாயிறு 18, மே 2025 10:44:15 AM (IST)
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே தனியார் நிறுவனத்தில் 754 கிலோ கஞ்சா தீயிலிட்டு அழிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனையை தடுப்பதற்காக போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் 171 வழக்குகளில் மொத்தம் 754 கிலோ 333 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனை நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே பொத்தையடி கிராமத்தில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்தில் தீயிலிட்டு அழிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
ராமநாதபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. மூர்த்தி தலைமையில், ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ், நாங்குநேரி உதவி காவல் கண்காணிப்பாளர் பிரசன்னகுமார், சிவகங்கை மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் பிரான்சிஸ், ராமநாதபுரம் மதுவிலக்கு துணை கண்காணிப்பாளர் சூப்பிரண்டு ரமேஷ் மற்றும் தடய அறிவியல் துறை சிவராஜ் ஆகியோர் முன்னிலையில், கஞ்சாவை தீயிலிட்டு அழித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எஸ்ஐஆர் படிவங்களைப் பெறும் பணி நிறைவு: டிச.19-ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!
திங்கள் 15, டிசம்பர் 2025 10:47:13 AM (IST)

நாகர்கோவில் அருகே சாலை மையத்தடுப்பில் மோதி கவிழ்ந்த ஆம்னி பஸ்; 13 பேர் காயம்
திங்கள் 15, டிசம்பர் 2025 7:46:19 AM (IST)

ஈரோட்டில் தவெக தலைவா் விஜய் தேர்தல் பிரசார கூட்டத்துக்கு அனுமதி
ஞாயிறு 14, டிசம்பர் 2025 7:18:40 PM (IST)

தென்காசியில் மக்கள் நீதிமன்றம்: ரூ. 5 கோடி மதிப்புள்ள வழக்குகளுக்கு தீர்வு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 11:07:49 AM (IST)

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நாளை புதிய வாக்காளர் பெயர் சேர்க்கும் முகாம்!
சனி 13, டிசம்பர் 2025 5:55:15 PM (IST)

தமிழகத்தில் 2 நாட்களுக்கு குளிர் அதிகரிக்கும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
சனி 13, டிசம்பர் 2025 5:50:12 PM (IST)










