» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழகத்தில் தேர்தல் வந்தால் தி.மு.க. ஆட்சி முடிவுக்கு வந்துவிடும்: டி.டி.வி.தினகரன்
ஞாயிறு 1, அக்டோபர் 2023 5:05:06 PM (IST)
தமிழக மக்கள் தி.மு.க. ஆட்சியின் மீது அதிருப்தியில் உள்ளார்கள். தேர்தல் வந்தால் தி.மு.க. ஆட்சி முடிவுக்கு வந்துவிடும் என டி.டி.வி.தினகரன் கூறினார்.
மதுரையில் இன்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தேர்தல் கூட்டணி போன்ற முடிவுக்கு பொதுவாகவே மூன்று வாய்ப்புகள் உள்ளது. எங்களுக்கு ஒன்று பா.ஜ.க. உடன் கூட்டணி, மற்றொன்று காங்கிரசுடன் கூட்டணி அல்லது தனித்து போட்டியிடுவது. 2026 சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலையை முதல்வர் வேட்பாளர் என்று அறிவிக்க வற்புறுத்தியதால் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியில் முறிவு ஏற்பட்டதாக வரும் தகவலுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. தமிழக மக்கள் தி.மு.க. ஆட்சியின் மீது அதிருப்தியில் உள்ளார்கள். எடப்பாடி பழனிசாமி செய்த ஊழல்கள் தவறுகளால்தான், தி.மு.க.வுக்கு வாக்களித்தார்கள்.
இன்று தி.மு.க.வுக்கு ஏன் வாக்களித்தோம் என்று மக்கள் உணர்ந்து வருகின்றனர். தமிழகத்தில் எப்போது தேர்தல் வந்தாலும் தி.மு.க. ஆட்சிக்கு முடிவு கட்டப்படும். தி.மு.க.வுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் மாற்று சக்தியாக அ.ம.மு.க. வரும். தமிழக மக்கள் உறுதியாக எங்களை ஆதரிப்பார்கள். தி.மு.க. அரசு கொடுத்த வாக்குறுதிகளில் 90 சதவீதத்தை நிறைவேற்றவில்லை. சட்டம்-ஒழுங்கு கெட்டுப்போய் உள்ளது. விலைவாசி ரெக்கை கட்டி பறக்கிறது. தேர்தல் வாக்குறுதிகளுக்கு எதிராக இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
விவசாயிகள், அரசு ஊழியர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள். மேலும் ஆளுநர் பட்டியலின பெண்ணுக்கு நீதி கிடைக்கவில்லை, இதுதான் சமூக நீதியா என கூறுவது கேலி கூற்றானது. தமிழகத்தில் ஆண், பெண் சமம் என்ற சமூக நீதி பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் செயல்களால் தான் பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வு இல்லாத சமூக நீதி உள்ள சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்குகிறது.
தமிழகத்தில் தீண்டாமை இல்லை. ஜாதி, சமய வேறுபாடு இல்லை. கல்வி, தொழிலில் பிறப்பால் எந்த பிரிவினையும் இல்லை. ஆண்களும், பெண்களும் இரு கண்கள் என்ற அடிப்படையில் சமுதாயம் வளர்ந்துள்ளது. எனவே இங்கொன்றும், அங்கொன்றும் தனி நபர்களின் செயல்பாடுகளை வைத்து ஆளுநர் பேசுவது தவறு.
மேலும் தமிழகத்தில் ஜாதி, மத வேறுபாடுகளுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். பா.ஜ.க.வுடன் கூட்டணி குறித்த எந்த பதிலும் தற்போது சொல்ல முடியாது, தேர்தல் நேரத்தில் சொல்வோம். ஓ.பி.எஸ். எனது பழைய நண்பர், அவர் ஏதோ கோபத்தில் செய்தது எவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்டாலும் நண்பர் என்ற முறையில் மீண்டும் இணைவது என்பது தமிழ்நாட்டில் நடப்பது தான்.
அவர் தனித்து முடிவெடுப்பார், ஆனால் நாங்கள் இருவரும் இணைந்து செயல்படுவோம் என மட்டும் தான் கூறியுள்ளோம். அவருடைய செயல்பாடுகள் பற்றி எதுவும் சொல்ல இயலாது. அ.ம.மு.க. எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி வைக்கக்கூடாது என 90 சதவீதம் அ.ம.மு.க.வினர் விரும்புகிறார்கள். ஓ.பி.எஸ்.சுடன் கூட்டணி சேர்ந்தாலும் நாங்கள் சேரமாட்டோம். தனியாகவே போட்டியிடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் கருத்து
MGR ரசிகர்Oct 2, 2023 - 03:30:17 PM | Posted IP 172.7*****
இப்பவே அவங்களையும் காணோம் , உங்களையும் காணோம்....சந்தேகமே இல்லை அவர்களின் ஜெராக்ஸ் COPY தான் நீங்கள்....
20 ரூபாய்Oct 1, 2023 - 06:44:01 PM | Posted IP 172.7*****
டோக்கன்
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவில் அருகே சாலை மையத்தடுப்பில் மோதி கவிழ்ந்த ஆம்னி பஸ்; 13 பேர் காயம்
திங்கள் 15, டிசம்பர் 2025 7:46:19 AM (IST)

ஈரோட்டில் தவெக தலைவா் விஜய் தேர்தல் பிரசார கூட்டத்துக்கு அனுமதி
ஞாயிறு 14, டிசம்பர் 2025 7:18:40 PM (IST)

தென்காசியில் மக்கள் நீதிமன்றம்: ரூ. 5 கோடி மதிப்புள்ள வழக்குகளுக்கு தீர்வு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 11:07:49 AM (IST)

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நாளை புதிய வாக்காளர் பெயர் சேர்க்கும் முகாம்!
சனி 13, டிசம்பர் 2025 5:55:15 PM (IST)

தமிழகத்தில் 2 நாட்களுக்கு குளிர் அதிகரிக்கும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
சனி 13, டிசம்பர் 2025 5:50:12 PM (IST)

திருப்பரங்குன்றம் பிரச்சினைக்கு பாஜக, திமுக அரசுதான் காரணம் : சீமான் குற்றச்சாட்டு!
சனி 13, டிசம்பர் 2025 4:04:43 PM (IST)











peopleOct 2, 2023 - 06:06:04 PM | Posted IP 172.7*****