» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகியதால் எங்களுக்கு நஷ்டம் இல்லை: எச்.ராஜா பேட்டி

புதன் 27, செப்டம்பர் 2023 10:34:10 AM (IST)

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகியதால் எங்களுக்கு நஷ்டம் இல்லை என பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்தார்.

சங்கரன்கோவில் முப்பிடாதி அம்மன் கோவில் முன்பு நெருக்கடி காலத்தில் சிறை சென்றவர்களை பாராட்டி நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா நேற்று சங்கரன்கோவிலுக்கு வந்தார். முன்னதாக தனியார் விடுதியில் நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகியது எங்களுக்கு நஷ்டம் இல்லை. அ.தி.மு.க.விற்குத்தான் நஷ்டம். 

1991-ல் இருந்து பா.ஜ.க. தேசிய அளவில் தனித்து நின்று தனித்திறமையை நிரூபித்துள்ளது. 2014-ல் தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. இல்லாமல் தேசிய ஜனநாயக கூட்டணி 20 சதவீத வாக்குகளை பெற்றுள்ளோம். அப்போதே தமிழகத்தில் பா.ஜ.க. கால் ஊன்றி விட்டது. வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க. தலைமையில் மிகப்பெரிய மெகா கூட்டணி அமைத்து வெற்றி பெறுவோம். தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் பா.ஜ.க.வின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்று தெரிவித்தார்.

பேட்டியின் போது தென்காசி மாவட்ட முன்னாள் தலைவர் ராமராஜா, மாவட்ட செயலாளர்கள் ராஜலட்சுமி சுந்தர்ராஜ், சுப்பிரமணியன், விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட தலைவர் வன்னியராஜ் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital

CSC Computer Education




Thoothukudi Business Directory