» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் பத்திரிகையாளர் சங்க நிர்வாகிகள் சந்திப்பு

புதன் 2, ஜூன் 2021 8:42:30 PM (IST)



தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க தலைவர்  டி.எஸ்.ஆர்.சுபாஷ் மற்றும் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். 

தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க மாநிலத் தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் அவர்கள் தலைமையில், தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, பத்திரிக்கையாளர்களுக்கு நல வாரியம் அமைத்தல், கொரோனா கால நிதி அனைத்து தாலுகா பத்திரிகையாளர்களுக்கும் வழங்குதல், கொரோனாவால் மறைந்த செய்தியாளர்கள் குடும்ப நல நிதி பத்து லட்சம் ரூபாய் விரைவாக வழங்குதல் உட்பட பல கோரிக்கைகள் அடங்கிய மனு வழங்கப்பட்டது.

மாநில பொதுச் செயலாளர் கு.வெங்கட்ராமன், மாநிலத் துணை தலைவர்கள் கோவை ஏ.கே.பிரபாகரன், பொன்னேரி பாலகிருஷ்ணன், மாநில ஒருங்கினைப்பாளர் கடலூர் கே.ரமேஷ் குமார், புதுச்சேரி பத்திரிகையாளர் யூனியன் தலைவர் எம்.பி.மதிமகாராஜா,  தலைமை நிலயச் செயலாளர் "திருத்தணி" விநோத் குமார், தேசியக் குழு உறுப்பினர் "கழுகு" கே.ராஜேந்திரன், வேலூர் மாவட்ட தலைவர் சிவமூர்த்தி, தென் சென்னை மாவட்ட தலைவர் லட்சுமணன், மாநில அமைப்புச் செயலாளர் "லயன்" டாக்டர் எல்.பரமேஸ்வரன், இலக்கியப் பிரிவு செயலாளர் "கவிஞர்" PSP விஜயபாலா, மற்றும் நிர்வாகிகள் "ஸ்டிக்கர்" சுரேஷ், "அன்புக் கரங்கள்" அப்துல் லத்தீப், "இன்சூரன்ஸ்" கௌரி மேடம் ஆகியோர் உடன் இருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





CSC Computer Education


Arputham Hospital



Thoothukudi Business Directory