» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் அடுத்தடுத்து 3 பெண்களிடம் செல்போன், பணம் பறிப்பு - வாலிபர் கைது!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 11:48:46 AM (IST)
தூத்துக்குடியில் அடுத்தடுத்து மூன்று பெண்களிடம் செல்போன்கள் மற்றும் கைப்பை பணத்தைப் பறித்துச் சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த சண்முககனி (63) என்பவர் நேற்று மாலை சாலையில் நடந்து சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் அவரது கையிலிருந்த செல்போனைப் பறித்துச் சென்றார். அதேநபர், கோமதி பாய் காலனியைச் சேர்ந்த வையனாச்சி (55) என்பவரிடமும் செல்போனைப் பறித்துத் தப்பினார்.
விளாத்திகுளத்தைச் சேர்ந்த சந்திரா (55) என்பவர் தூத்துக்குடி அமெரிக்கன் மருத்துவமனையில் சிகிச்சையிலிருக்கும் தனது மகனைப் பார்த்துவிட்டு நடந்து சென்றபோது, அவரது கைப்பையைப் பறித்துச் சென்றார். அதில் ரூ.8,000 பணம் இருந்தது.
இச்சம்பவங்கள் குறித்துப் பாதிக்கப்பட்டவர்கள் வடபாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் காவல்துறையினர் அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை தீவிரமாக ஆய்வு செய்தனர்.
அதில், தூத்துக்குடி அண்ணா நகர் 12-வது தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் சக்தி கணேஷ் (25) என்பவரே இந்தத் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரைப் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எஸ்.ஐ. ரகு கணேஷுக்கு 2 நாட்கள் அவசரகால விடுப்பு: மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 12:13:26 PM (IST)

திருச்செந்தூரில் 100 அடி தூரம் உள்வாங்கிய கடல்!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 11:34:00 AM (IST)

தூத்துக்குடியில் பஸ் நிலையம் அருகே செல்போன் பறிப்பு: 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 11:14:51 AM (IST)

தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டிக்குத் தேர்வான தூத்துக்குடி மாணவருக்கு அமைச்சர் ஸ்ரீநாத் பாராட்டு!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 11:02:37 AM (IST)

மதுபோதையில் தகராறு செய்த மகன் சரமாரியாக வெட்டிக்கொலை : தந்தை வெறிச்செயல்!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 10:41:52 AM (IST)

தூத்துக்குடியில் வாகனம் மோதி ரவுடி பரிதாப பலி: போலீசார் தீவிர விசாரணை!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 10:36:15 AM (IST)








