» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூரில் 100 அடி தூரம் உள்வாங்கிய கடல்!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 11:34:00 AM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் பகுதியில் கடல் நீர் திடீரென 100 அடி தூரம் உள்வாங்கியதால், பாசி படர்ந்த அபாயகரமான பாறைகள் வெளியே தெரிந்தன.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும், அய்யா வைகுண்டர் அவதார பதிக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் ஒவ்வொரு மாதமும் வழக்கமாக அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்கள், அதற்கு முந்தைய நாள் மற்றும் பிந்தைய நாட்களில் கடல் நீர் உள்வாங்குவது இயல்பான நிகழ்வாகும்.
இன்று காலை திருச்செந்தூர் கடலில் திடீரென சுமார் 100 அடி தூரத்திற்கு நீர் உள்வாங்கியது. நீர் உள்வாங்கியதால் கடலுக்குள் இருக்கும் பாசி படர்ந்த பாறைகள் வெளியே தென்பட்டன. இதைக் கண்ட பக்தர்கள் பலர் ஆபத்தை உணராமல், அந்தப் பாறைகள் மீது ஏறி நின்று செல்ஃபி மற்றும் புகைப்படங்கள் எடுத்தனர்.
கடல் உள்வாங்கிய பகுதியிலும், பாறைகள் மீதும் ஆபத்தான முறையில் நின்றிருந்த பக்தர்களுக்குக் காவல்துறையினர் மற்றும் கோவில் கடற்கரைப் பாதுகாப்புப் பணியாளர்கள் உடனடியாக எச்சரிக்கை விடுத்து அப்பகுதியில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எஸ்.ஐ. ரகு கணேஷுக்கு 2 நாட்கள் அவசரகால விடுப்பு: மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 12:13:26 PM (IST)

தூத்துக்குடியில் அடுத்தடுத்து 3 பெண்களிடம் செல்போன், பணம் பறிப்பு - வாலிபர் கைது!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 11:48:46 AM (IST)

தூத்துக்குடியில் பஸ் நிலையம் அருகே செல்போன் பறிப்பு: 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 11:14:51 AM (IST)

தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டிக்குத் தேர்வான தூத்துக்குடி மாணவருக்கு அமைச்சர் ஸ்ரீநாத் பாராட்டு!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 11:02:37 AM (IST)

மதுபோதையில் தகராறு செய்த மகன் சரமாரியாக வெட்டிக்கொலை : தந்தை வெறிச்செயல்!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 10:41:52 AM (IST)

தூத்துக்குடியில் வாகனம் மோதி ரவுடி பரிதாப பலி: போலீசார் தீவிர விசாரணை!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 10:36:15 AM (IST)








