» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
உப்பள நிலங்கள் கையகப்படுத்துவதைக் கைவிட வேண்டும்: நெல்லை முபாரக் வலியுறுத்தல்!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 10:28:38 AM (IST)

தூத்துக்குடி முள்ளக்காடு பகுதியில் கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்காக உப்பள நிலங்களைக் கையகப்படுத்தும் முடிவைத் தமிழக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வலியுறுத்தியுள்ளார்.
தூத்துக்குடி முள்ளக்காடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்காக உப்பள நிலங்களைக் கையகப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உப்பு உற்பத்தியாளர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் அப்பகுதிகளை நேரில் பார்வையிட்டு உற்பத்தியாளர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் நெல்லை முபாரக் கூறியது: "கடந்த 1937-ஆம் ஆண்டு உப்பு சத்தியாகிரகப் போராட்டத்திற்குப் பிறகு, நமது முன்னோர்கள் தங்கள் சொந்த செலவிலும் உடலுழைப்பாலும் சீரமைத்த நிலங்கள் இவை. 90 ஆண்டுகளுக்கும் மேலாகத் தலைமுறை தலைமுறையாக வாழ்வாதாரமாக இருக்கும் இந்த நிலங்களைத் தனியார் நிறுவனங்களுக்குத் தாரை வார்ப்பது பேரநீதியாகும்."
நிலங்கள் கையகப்படுத்தப்பட்டால் ஆண்டுதோறும் 5 லட்சம் டன் உப்பு உற்பத்தி முடங்கும். இதனால் தமிழகம் தனது அத்தியாவசிய உப்புத் தேவைக்குக் குஜராத்திடம் கையேந்தும் நிலை உருவாகும்.
உப்பு உற்பத்தியை நம்பியுள்ள 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் வணிகர்கள் வாழ்வாதாரத்தை இழப்பார்கள். மேலும், மழைக்கால வடிகாலாகப் பயன்படும் மதிகெட்டான் ஓடைப் பகுதியும், பாரம்பரிய மீன்பிடித் தொழிலும் முற்றிலுமாகப் பாதிக்கப்படும்.
உப்பளங்கள் மூலம் அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் முதல் ₹70 லட்சம் வரை வருவாய் ஈட்ட முடியும். ஏக்கருக்கு ஆண்டுக்கு ₹5,000 வீதம் நியாயமான குத்தகைத் தொகையைச் செலுத்த உற்பத்தியாளர்கள் தயாராக உள்ளனர். அதை ஏற்று, நீண்டகாலக் குத்தகை உரிமையை வழங்கி உற்பத்தியைப் பாதுகாக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது உப்பு உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் சேகர், பொன்ராஜ், சின்னராஜ், பால்ராஜ், முகேஷ் சண்முகவேல், சிவாகர் மற்றும் எஸ்டிபிஐ கட்சியின் தூத்துக்குடி மாவட்டத் தலைவர் ஷேக் அஷ்ரப் அலி பைஜி, செயலாளர் முகம்மது உமர், SDTU மாவட்ட தலைவர் குலசை தாஹிர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அடுத்தடுத்து 3 பெண்களிடம் செல்போன், பணம் பறிப்பு - வாலிபர் கைது!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 11:48:46 AM (IST)

திருச்செந்தூரில் 100 அடி தூரம் உள்வாங்கிய கடல்!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 11:34:00 AM (IST)

தூத்துக்குடியில் பஸ் நிலையம் அருகே செல்போன் பறிப்பு: 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 11:14:51 AM (IST)

தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டிக்குத் தேர்வான தூத்துக்குடி மாணவருக்கு அமைச்சர் ஸ்ரீநாத் பாராட்டு!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 11:02:37 AM (IST)

மதுபோதையில் தகராறு செய்த மகன் சரமாரியாக வெட்டிக்கொலை : தந்தை வெறிச்செயல்!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 10:41:52 AM (IST)

தூத்துக்குடியில் வாகனம் மோதி ரவுடி பரிதாப பலி: போலீசார் தீவிர விசாரணை!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 10:36:15 AM (IST)








