» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீனில் விடுதலை: திமுகவினர் உற்சாக வரவேற்பு

செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 4:23:32 PM (IST)

முதலமைச்சர் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கைது செய்யப்பட்டுப் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாக எழுந்த புகாரின் பேரில், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் மார்க்கண்டேயன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, அவர் கடந்த மாதம் 20-ஆம் தேதி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று நீதிமன்றம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவுச் நகல் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து, சிறை நிர்வாகத்தின் வழக்கமான நடைமுறைகள் நிறைவடைந்தன. இதன்பின்னர், விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் பாளையங்கோட்டை மத்திய சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்தார். அவரை திமுகவினர் மாலை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory