» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கடைகளில் திடீர் சோதனை: 70 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல், ரூ.6,700 அபராதம்!
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 4:17:22 PM (IST)

தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் உள்ள கடைகளில் அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில், அரசால் தடை செய்யப்பட்ட 70 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்கும் வகையில், மாநகராட்சி ஆணையர் உத்தரவின் பேரில் அதிகாரிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மேற்கு மண்டலத்திற்குட்பட்ட ஜெயராஜ் ரோடு பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் திடீர் ஆய்வு நடத்தினர்.
இந்த ஆய்வின் போது, அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கடைகளில் இருந்து 70 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், கடை உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.6,700 அபராதம் விதிக்கப்பட்டது.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தும் கடைகள் மீது தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கடை உரிமையாளர்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாடு காது கேளாதோர் உரிமை நலச்சங்கம் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் தேர்வு!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 10:14:17 AM (IST)

முதியவரிடம் ரூ.48 லட்சம் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி : வாலிபர் கைது!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:43:26 AM (IST)

விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் மாயம் - தேடும் பணி தீவிரம்!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:37:37 AM (IST)

காரில் கஞ்சா கடத்திய சிறை வார்டன் உள்பட 2 பேர் கைது : 2கிலோ கஞ்சா, கார், ரூ.10 லட்சம் பறிமுதல்!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:31:48 AM (IST)

மழைக்கு முன்பாக வி.வி.டி. ரோட்டில் சீரமைப்பு பணிகள்: வீ தி லீடர்ஸ் அமைப்பு கோரிக்கை!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:06:00 AM (IST)

சட்டப்பேரவையை ரீல்ஸ் போன்று நடத்துகிறது தவெக அரசு: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:03:59 AM (IST)








