» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ஆக.7, 12 ஆகிய தேதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்: மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு!

செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 3:50:18 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் வருகிற 7 மற்றும் 12 ஆகிய தேதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 7 (வெள்ளிக்கிழமை): தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளுக்குக் குடிநீர் விநியோகம் செய்யப்படும் வல்லநாடு தலைமை நீரேற்று நிலையப் பகுதியில், குறிப்பாகக் கலியாவூரிலிருந்து வல்லநாடு குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு வரும் பிரதான குடிநீர் குழாயில் பெரிய அளவிலான உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் குடிநீர் பெருமளவில் வெளியேறுவதால், அதனை உடனடியாகச் சீரமைக்கும் பணிகள் நடைபெறவுள்ளன. இதனால் 07.08.2026 (வெள்ளிக்கிழமை) அன்று குடிநீர் விநியோகம் இருக்காது.

ஆகஸ்ட் 12 (புதன்கிழமை): கொம்புகாரநத்தம் உபமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், 12.08.2026 (புதன்கிழமை) அன்றைய தினமும் மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும்.

மேற்கண்ட இரு தினங்களிலும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவதால், பொதுமக்கள் தங்களுக்குக் கிடைக்கும் குடிநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, மாநகராட்சியின் பராமரிப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சி. பிரியங்கா வேண்டுகோள் விடுத்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory