» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
உதயநிதி ஸ்டாலின் கைது: தூத்துக்குடியில் தனி ஆளாக சாலை மறியலில் ஈடுபட்ட பெண் கைது!
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 3:42:25 PM (IST)

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதைக் கண்டித்து, தூத்துக்குடியில் பெண் ஒருவர் தனி ஆளாகச் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்துத் தமிழகம் முழுவதும் திமுகவினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் பகுதியில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான திமுகவினரைச் சேர்ந்தவர்களைக் காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர். திமுகவினர் கைது செய்யப்பட்ட தகவலை அறிந்ததும், பேருந்து நிலையத்தில் பேருந்துக்காகக் காத்திருந்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பாத்திமா பீவி என்பவர், உடனே சாலையில் இறங்கித் தனி ஒரு பெண்ணாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது அங்குப் பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர், "நீங்கள் இங்கிருந்து செல்லுங்கள்" எனக் கூறியுள்ளனர். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த அவர், "நான் செல்ல மாட்டேன், என்னையும் கைது செய்யுங்கள்" எனக் கூறி உதயநிதி ஸ்டாலினை விடுதலை செய்ய வலியுறுத்தி முழக்கமிட்டார்.
இதனைத் தொடர்ந்து, தனி ஆளாகப் போராட்டத்தில் ஈடுபட்ட பாத்திமா பீவியை காவல்துறையினர் கைது செய்து ஆட்டோவில் ஏற்றி அழைத்துச் சென்றனர். விசாரணையில், அவர் புதுக்கோட்டை மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளராகப் பொறுப்பு வகிக்கும் பாத்திமா பீவி என்பது தெரியவந்தது. தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் பெண் ஒருவர் தனி ஆளாகச் சாலை மறியலில் ஈடுபட்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சுதா கருத்தரித்தல் மையம் சார்பில் இலவச மருத்துவ ஆலோசனை முகாம்: ஆக.13, 14ல் நடைபெறுகிறது!
புதன் 12, ஆகஸ்ட் 2026 12:35:31 PM (IST)

மக்களைத் தேடி மருத்துவம் திட்ட ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு கோரிக்கை!
புதன் 12, ஆகஸ்ட் 2026 12:06:03 PM (IST)

மின்சாரம் தாக்கி பெண் உள்பட 2பேர் பரிதாப சாவு
புதன் 12, ஆகஸ்ட் 2026 11:30:22 AM (IST)

தூத்துக்குடி குடிநீர் பிரச்னையில் அமைச்சர் மவுனம் ஏன்? — பாஜக சராமாரி கேள்வி
புதன் 12, ஆகஸ்ட் 2026 11:11:16 AM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் மதிப்புக் கூட்டப்பட்ட மீன்வளப் பொருட்கள் தயாரித்தல் பயிற்சி
புதன் 12, ஆகஸ்ட் 2026 11:02:45 AM (IST)

டி.எம்.பி. அறக்கட்டளை சார்பில் 30 பேருக்கு இலவச டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 சிறப்புப் பயிற்சி!
புதன் 12, ஆகஸ்ட் 2026 10:08:10 AM (IST)








