» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஸ்பிக் நிறுவனம் சார்பில் பாய்மன வாய்க்கால் தூர்வாரும் பணி தொடக்கம்!
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 3:07:15 PM (IST)

தூத்துக்குடி ஸ்பிக் உரத் தொழிற்சாலை நிர்வாகம் சார்பில் பாய்மன வாய்க்காலைத் தூர்வாரி சீரமைக்கும் பணி இன்று தொடங்கியது.
தூத்துக்குடி முள்ளக்காடு - முத்தையாபுரம் - அத்திமரப்பட்டி விவசாய சங்கத்தின் கோரிக்கையை ஏற்று, ஸ்பிக் தொழிற்சாலை நிர்வாகம் சார்பில் ஆண்டுதோறும் பாய்மன வாய்க்காலைத் தூர்வாரி சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று காலை பாய்மன வாய்க்கால் தூர்வாரும் பணி முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டது.
இப்பணியின் தொடக்க நிகழ்விற்குச் ஸ்பிக் நிறுவன உதவிப் பொது மேலாளர் ஜெயப்பிரகாஷ் முன்னிலை வகித்துத் தூர்வாரும் பணியைத் தொடங்கி வைத்தார். இந்தப் பணியானது தொடர்ந்து ஒரு வாரம் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் மக்கள் தொடர்பு உதவி மேலாளர் மணிகண்டன், முகப்பு நிலை அலுவலர் சரவணன், விவசாய சங்கத் தலைவர் மற்றும் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாடு காது கேளாதோர் உரிமை நலச்சங்கம் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் தேர்வு!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 10:14:17 AM (IST)

முதியவரிடம் ரூ.48 லட்சம் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி : வாலிபர் கைது!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:43:26 AM (IST)

விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் மாயம் - தேடும் பணி தீவிரம்!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:37:37 AM (IST)

காரில் கஞ்சா கடத்திய சிறை வார்டன் உள்பட 2 பேர் கைது : 2கிலோ கஞ்சா, கார், ரூ.10 லட்சம் பறிமுதல்!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:31:48 AM (IST)

மழைக்கு முன்பாக வி.வி.டி. ரோட்டில் சீரமைப்பு பணிகள்: வீ தி லீடர்ஸ் அமைப்பு கோரிக்கை!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:06:00 AM (IST)

சட்டப்பேரவையை ரீல்ஸ் போன்று நடத்துகிறது தவெக அரசு: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:03:59 AM (IST)








