» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பூச்சிக்கொல்லி மருந்து குடித்து முதியவர் தற்கொலை

செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 11:06:34 AM (IST)

எட்டையபுரம் அருகே இளம்புவனம் கிராமத்தில் 82 வயது முதியவர் ஓடையில் பூச்சிக்கொல்லி மருந்து குடித்துத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்துப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகேயுள்ள இளம்புவனம் கிராமம், காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பரமசிவன் மகன் சண்முகையா (82). இவரது மனைவி பேச்சியம்மாள். இந்த தம்பதியருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.இந்நிலையில், வழக்கம்போல் நேற்று காலை இளம்புவனம் கிராமத்தில் உள்ள நாகேந்திரன் என்பவரது டீக்கடையில் நின்று பேசிவிட்டுச் சென்றுள்ளார். 

இதனைத் தொடர்ந்து, மதியம் 12 மணியளவில் இளம்புவனம் - வங்கார்பட்டி கிராமம் செல்லும் சாலையில் உள்ள ஓடைப் பகுதியில் சண்முகையா பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அவரது தற்கொலைக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. இச்சம்பவம் குறித்து எட்டையபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory