» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கழிவுமீன் நிறுவனங்களை மூடக்கோரி 668-வது நாளாக பொட்டலூரணி மக்கள் போராட்டம்!

வெள்ளி 13, மார்ச் 2026 10:28:37 AM (IST)



தூத்துக்குடி அருகேயுள்ள பொட்டலூரணி பகுதியில் கழிவுமீன் நிறுவனங்களை மூடக்கோரி 668-வது நாளாக போராட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி அருகேயுள்ள பொட்டலூரணி பகுதியில் உள்ள கழிவுமீன் நிறுவனங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைச் சுட்டிக்காட்டி, அவற்றை மூட வலியுறுத்தி கடந்த ஐந்து ஆண்டுகளாக மக்கள் போராட்டங்களை நடத்தி வந்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தப் போராட்டம் அறவழியில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. 

'நாள்கூடிக்' குழுமிப் போராடுதல், 'மாதக் கூடல்' ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் எனப் பல்வேறு வடிவங்களில் மக்கள் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர். இந்த மாதத்திற்கான 'மாதக் கூடல்' போராட்டம், போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சங்கரநாராயணன் தலைமையில் நடைபெற்றது. போராட்டக் குழுவின் பொறுப்பாளர்கள் இராதாகிருஷ்ணன், ஈஸ்டர் அந்தோணிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

தலைமைப் பொறுப்பாளர் சண்முகம் வரவேற்புரையாற்றினார். வீரத்தமிழர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வைகுண்டமாரி, தமிழ்த் தேசியப் பேரவையின் பொறுப்பாளர் மணிமாறன், சமூக ஆர்வலர் பிரபா ஆகியோர் ஆகியோர் கண்டன உரையாற்றினர். நிகழ்வின் இறுதியில் பாலமுருகன் நன்றியுரை வழங்கினார். இதில் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital




Thoothukudi Business Directory