» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் உலக மண்வள தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

வெள்ளி 5, டிசம்பர் 2025 5:52:43 PM (IST)



தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உலக மண்வள தினத்தை முன்னிட்டு "ஆரோக்கியமான நகரங்களுக்கு ஆரோக்கியமான மண்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நீர்வளச் சூழலியல் மேலாண்மை துறையின் உதவி பேராசிரியர் மற்றும் துறை தலைவர் (பொ) து. மணிமேகலை தனது வரவேற்புரையில் மண்வள பாதுகாப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். கல்லூரியின் முதல்வர் (பொ) சா. ஆதித்தன் மண் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வழிமுறைகளை எடுத்துரைத்தார்.

மண் தினத்தின் முக்கியத்துவத்தை முன்னிறுத்தும் வகையில் "மண் பாதுகாப்பில் இளைஞர்களின் பங்கு” என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது. மேலும் ஆங்கிலக்கட்டுரை போட்டி, தமிழ் கட்டுரைப்போட்டி மற்றும் ஓவியப்போட்டியும் நடத்தப்பட்டது. உதவிபேராசிரியர் அ. ஜுலியட் செல்வராணி நன்றியுரை வழங்கினார். மேலும், உதவிபேராசிரியர் ஸ்ரீ. சக்தி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். இறுதியில் வெற்றியாளர்களுக்கு சான்றிதல் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education




Arputham Hospital



Thoothukudi Business Directory