» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மாடு குறுக்கே வந்ததால் பைக் விபத்து : பால் வியாபாரி உயிரிழப்பு!

வெள்ளி 5, டிசம்பர் 2025 12:04:32 PM (IST)

தூத்துக்குடியில் சாலையில் மாடு குறுக்கே வந்ததால் நிகழ்ந்த பைக் விபத்தில் பலத்த காயம் அடைந்த  பால் வியாபாரி பரிதாபமாக இறந்தார்.  

தூத்துக்குடி அண்ணா நகர் 8வது தெருவைச் சேர்ந்தவர் பூபால் மகன் சேகர் (58), பால் வியாபாரி. இவர் கடந்த 29ம் தேதி இரவு 9 மணியளவில் மீளவிட்டான் அருகே  பண்டாரம்பட்டி - சில்வர்புரம் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் குறுக்கே மாடு வந்ததால் பைக் விபத்துக்குள்ளானது.

இதில் பலத்த காயம் அடைந்த சேகர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்தார். இந்த சம்பவம் குறித்து சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தனசேகரன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital


CSC Computer Education




Thoothukudi Business Directory