» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குடிநீர் குழாய் உடைந்து பிரதான சாலையில் வெள்ளம் : தூத்துக்குடியில் பரபரப்பு

வெள்ளி 5, டிசம்பர் 2025 3:33:54 PM (IST)



தூத்துக்குடியில் பிரதான சாலையில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக வெளியறுவதால் சாலையில் ஆறுபோல தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. 

தூத்துக்குடி மாநகரின் மத்திய பகுதியில் எட்டயபுரம் சாலை, ரஹ்மத்துல்லா புரம் பகுதியில் இன்று அதிகாலையில் வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் குழாய் உடைந்து குடிநீர் மளமளவென வெளியேறி சாலையில் ஆறாக ஓடியது. இதனால் மழை வெள்ளம் போல் சாலையில் தண்ணீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர. 

உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் இந்த குடிநீர் பைப் உடைப்பை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து மேயர் ஜெகன் பெரியசாமியிடம் கேட்டபோது "மாநகராட்சி தரப்பில் யாரும் சாலையை தோண்டி பைப் லைன் வேலை செய்யவில்லை. யாரும் மர்ம நபர்கள் திருட்டு லைன் கொடுப்பதற்காக தோண்டப்பட்டதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளது என்று தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education


Arputham Hospital





Thoothukudi Business Directory