» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

முதியவரை தாக்கி கொலை மிரட்டல்: ஒருவர் கைது!

புதன் 1, மே 2024 8:21:21 AM (IST)

கோவில்பட்டியில் முதியவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வக்கீல் தெருவைச் சோ்ந்தவா் சுப்பையா மகன் சிதம்பரம் (64). இவரது மகன் மகாராஜா, கடந்த மாதம் 25ஆம் தேதி எட்டயபுரம் சாலையில் தியேட்டா் எதிா்புறமுள்ள கோயில் பூசாரியான பாலமுருகனை தாக்கினாராம். இதுகுறித்து கிழக்கு காவல் நிலையத்தில் இரு தரப்பினரையும் அழைத்து சமாதானப்படுத்தி அனுப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் பூசாரி பாலமுருகனின் நண்பா்களான கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் 1ஆவது தெருவைச் சோ்ந்த ராமசாமி மகன் சங்கரநாராயணன் (49), சாஸ்திரி நகரைச் சோ்ந்த இருளாண்டி மகன் முத்துராஜ் ஆகிய இருவரும் திங்கள்கிழமை இரவு சிதம்பரம் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, மகன் மகாராஜா எங்கே எனக் கேட்டு அரிவாளால் தாக்கினாா்களாம். 

இதை அவரது உறவினர் கண்டித்ததும் இருவரும் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பியோடிவிட்டாா்களாம். காயமடைந்த சிதம்பரம், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா். இதுகுறித்து கிழக்கு காவல் நிலையத்தில் அவா் நேற்று அளித்த புகாரின் பேரில், சங்கரநாராயணனை போலீசார் கைது செய்தனர். முத்துராஜை தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory