» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பாலத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: எம்பவர் கோரிக்கை!

புதன் 8, மே 2024 10:24:15 AM (IST)

சிந்தலக்கரை அருகே பாலத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எம்பவர் நுகர்வோர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடுவம் கௌரவ  செயலாளர் ஆ.சங்கர் கோரிக்கை விடுத்துள்ளார். 

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு அவர் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில், "மதுரை - தூத்துக்குடி மார்க்கத்தில் எட்டயாபுரம் அருகே உள்ள சிந்தலக்கரை மார்க்கத்தில் பாசன கண்மாயின் உபரி நீர் செல்லும் ஓடையின் குறுக்கே உள்ள பழைய பாலத்தின் பக்கவாட்டு சுவரை மட்டும் சீரமைத்து வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. 

ஆனால் அந்த பாலத்துக்கு 100 மீட்டருக்கு முன்பு திடீரென சாலை குறுகலாவதால் வேகமாக வரும் வாகனங்கள் பாலத்தின் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளாவது தொடர் கதையாகி வருகிறது. அந்த இடத்தில் தற்போது வரை ஏராளமான விபத்துகள் நடந்து உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. ஆகவே இந்த பாலத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். 


மக்கள் கருத்து

ஆனந்த்மே 8, 2024 - 11:22:26 AM | Posted IP 162.1*****

கோரிக்கை தான் விடுப்பார் செய்த சாதனை ஒன்றும் இருக்காது

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory