» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

எம்ஜிஆர் வேடமணிந்து அதிமுகவினர் வாக்கு சேகரிப்பு!

செவ்வாய் 16, ஏப்ரல் 2024 11:18:27 AM (IST)



விளாத்திகுளத்தில் எம்ஜிஆர் வேடமணிந்தும் எம்ஜிஆர் பாடல் பாடியும் அதிமுகவினர் வீடு வீடாக வாக்கு சேகரித்தனர். 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை ஏப்ரல் 17ம் தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அரசியல் கட்சியினர் தங்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இறுதிக்கட்ட அனல் பறக்கும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சிதம்பரம் நகர், பங்களாதெரு உள்ளிட்ட பகுதிகளில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணியை ஆதரித்து வீடு வீடாக சென்று, அதிமுக தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். 

இதில் அதிமுக தொண்டர் ஒருவர் எம்ஜிஆர் வேடமணிந்து "அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா" என்ற பாடலை பாடி வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்தத் தேர்தல் பிரச்சாரத்திற்கான ஏற்பாட்டினை விளாத்திகுளம் நகர செயலாளர் மாரிமுத்து ஏற்பாடு செய்திருந்தார், இந்நிகழ்வில் ஜெயலலிதா பேரவை வரதராஜ பெருமாள், மாவட்ட பிரதிநிதி வேல்முருகன், ஆனந்த், மகளிர் அணி ஒன்றிய தலைவி சாந்தி,காளிமுத்து, பொன்ராஜ் மற்றும் தேமுதிக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory