» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் நீர் மோர் பந்தல்: அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்தார்
திங்கள் 29, ஏப்ரல் 2024 3:07:50 PM (IST)
தூத்துக்குடி மாநகரம் மூன்றாவது மைல் பகுதியில் நீர் மோர் பந்தலை அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், திமுக இளைஞரணி செயலாளர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்படி கோடை காலத்தில் பொதுமக்கள் தாகம் தணிக்கும் வகையில் தூத்துக்குடி மூன்றாவது மைல் பகுதியில் நீர் மோர் பந்தலை திமுக வடக்கு மாவட்டச் செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன் திறந்து வைத்தார்.
நிகழ்வில் மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், பகுதி செயலாளர்கள் மேகநாதன், ரவீந்திரன், மாவட்ட பிரதிநிதியும் மாமன்ற உறுப்பினருமான இசக்கி ராஜா, மாநகர தொழிலாளர் அணி அமைப்பாளர் முருக இசக்கி, மாமன்ற உறுப்பினர் சரவணக்குமார், வட்டச் செயலாளர்கள் பொன் பெருமாள், சுரேஷ், மந்திரகுமார், செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கழகத் தலைவர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் ஆணைக்கிணங்க, கடும் கோடை வெப்பத்தில் மக்களின் தாகம் தீர்க்கும் வகையில் தூத்துக்குடி மாநகரம் - 3வது மைல் பகுதியில் இன்று நீர் மோர் பந்தலை திறந்து வைத்தபோது.@KanimozhiDMK@Udhaystalinpic.twitter.com/uGfeddKDKv
— P. Geetha Jeevan (@geethajeevandmk) April 29, 2024