» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சட்டவிரோதமாக பதுக்கிய 100 மதுபாட்டில்கள் பறிமுதல்: இளைஞர் கைது!

திங்கள் 29, ஏப்ரல் 2024 8:36:12 PM (IST)

சாத்தான்குளம் அருகே சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 100 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து இளைஞரை கைது செய்துள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம், தட்டார்மடம் பகுதியில் மதுவை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தட்டார்மடம் காவல் ஆய்வாளர் அனிதா தலைமையில் போலீசார் இன்று ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது முதலூர் பகுதியில் சந்தேகப்படும்படி நின்ற இளைஞரை பிடித்து விசாரித்தனர். 

அதில் அவர் நெல்லை மாவட்டம் உறுமன் குளத்தைச் சேர்ந்தவர் சுயம்பு மகன் ஆறுமுக கார்த்திக் (23) எனவும், விற்பனை செய்ய 100 மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடு¢¢த்து போலீசார் அவரை கைது செய்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory