» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நாசரேத்தில் குடியிருப்பு பகுதியில் குரங்குகள் அட்டகாசம்: பொதுமக்கள் பீதி

செவ்வாய் 16, ஏப்ரல் 2024 9:51:49 AM (IST)



நாசரேத்தில் குடியிருப்பு பகுதியில் குரங்குகள் அட்டகாசத்தால் பொது மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் பேரூராட்சிக்குட்பட்ட 3 வது வார்டு என்.றி.என் தெரு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இந்த பகுதியில் தினந்தோறும் பள்ளி கல்லூரிகளுக்கு செல்வதற்கு காலை மற்றும் மாலை வேளையில் மாணவ மாணவிகள் அந்த பகுதியில் பேருந்துக்காக வருவது வழக்கம். இந்த சூழ்நிலையில் கடந்த சில வாரங்களாக அப்பகுதியில் குரங்குகள் நடமாட்டம் அதிகரித்து காணப்பட்டது. மேலும் இந்த பகுதிக்கு வரும் குரங்குகள் அப்பகுதியில் உள்ள வீடுகளில் உள்ள உணவு பொருட்கள் மற்றும் பழங்கள் உள்ளிட்ட பொருட்களை தூக்கிக்கொண்டு செல்கின்றது. 

மேலும் அந்தப் பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகளை தொந்தரவு செய்து வருகிறது. பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகளை இந்த குரங்குகள் விரட்டி விரட்டி துரத்தி வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் குழந்தைகள் மற்றும் மாணவர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். எனவே இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் அப்பகுதியில் கூண்டு அமைத்து இந்த பகுதியில் உள்ள குரங்குகளை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory