» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காவல்துறையினருக்கான தபால் ஓட்டுப்பதிவு துவங்கியது

திங்கள் 15, ஏப்ரல் 2024 9:29:32 PM (IST)



நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த காவல் துறையினருக்கான தபால் ஓட்டுப்பதிவு இன்று நடைபெற்றது.
 
காவல்துறையில் பணியாற்றக் கூடியவர்கள் தேர்தல் நாளில் பணியில் ஈடுபட்டிருப்பதால் அவர்கள் முன்கூட்டியே  ஓட்டுக்கள் போடுவதற்கு தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் சொந்த மாவட்டத்தைச் சேர்ந்த 85 பேர்  மற்றும் வெளி மாவட்டத்தை சேர்ந்த 660 பேர் என மொத்தம் 745 காவல்துறையினருக்கான தபால் வாக்குப்பதிவு இன்று மற்றும் நாளையும் நடைபெற உள்ளது. 

அதன்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவுப்படி காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் உட்பட காவல்துறையினர் தங்களது தபால் வாக்குகளை இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதிவு செய்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory