» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தென்காசியில் தேர்தல் பாதுகாப்பு பணிகள் : ஆட்சியர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

திங்கள் 15, ஏப்ரல் 2024 5:17:40 PM (IST)



தென்காசி தொகுதியில் தேர்தல் பாதுகாப்பு பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் தென்காசி பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர்  தலைமை தாங்கினார். தேர்தல் பொதுப் பார்வையாளர் டோபேஷ்வர் வர்மா, காவல் துறை பார்வையாளர் பங்கஜ் நைன், தேர்தல் செலவின பார்வையாளர் சதீஷ் குருமூர்த்தி மற்றும் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காவல்துறை அலுவலர்கள் மேற்கொள்ளும் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory