» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பிரதமர் நரேந்திர மோடி நெல்லை வருகை : தொண்டர்கள் உற்சாக வரவேற்பு!
திங்கள் 15, ஏப்ரல் 2024 5:10:30 PM (IST)
மக்களவைத் தேர்தலையொட்டி கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நெல்லை வந்தார்.
மக்களவைத் தேர்தலையொட்டி கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்வதற்காக கடந்த வாரம் பாளையங்கோட்டையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக தற்போது நெல்லையில் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.
அம்பாசமுத்திரம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட அகஸ்தியபுரத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பாஜகவுக்கு ஆதரவாக உரையாற்றுகிறார். இதில், பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.