» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கொத்தாளி இசக்கியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

திங்கள் 15, ஏப்ரல் 2024 4:40:52 PM (IST)

கயத்தாறு அருகே கொத்தாளி இசக்கியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே கொத்தாளி இசக்கியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா 3 நாட்களுக்கு முன்னர் யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் ஸ்ரீமுப்பந்தல் இசக்கி அம்மன், ஸ்ரீ நீலிகாத்த வனப்பேச்சி அம்மன், நீலகண்ட சுவாமி, சுடலைமாடசாமி, ஸ்ரீ இசக்கிசக்தி அம்மன் ஆகிய 5 சுவாமிகளின் புதிய கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

இதனை தொடர்ந்து சிறப்பு தீபாராதனை செய்து பக்தர்களுக்கு புனித நீர் தெளித்தனர். விழாவில், கொத்தாளி, புதுக்கோட்டை, இராஜாபுதுக்குடி, கயத்தாறு, தூத்துக்குடி, கொல்லங்கிணறு,அம்மாள் பட்டி, உள்பட 20 கற்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், விழா கமிட்டியினர் செய்திருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory