» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
காவல் துறையினர் தபால் வாக்குப்பதிவு மையம் : ஆட்சியர் லட்சுமிபதி ஆய்வு!
திங்கள் 15, ஏப்ரல் 2024 12:38:25 PM (IST)
தூத்துக்குடி தொகுதியில் காவல் துறையினர் தபால் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்படுள்ள மையத்தில் ஆட்சியர் லட்சுமிபதி ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியினை சேர்ந்த பிற மாவட்டங்களில் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள காவல் துறையினர் மற்றும் அத்யாவசிய பணியாளர்கள் தபால் முறையில் வாக்களிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலக மூன்றாம் தளத்தில் உள்ள முத்து அரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு வசதி மையத்தில் வாக்களிப்பதை தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி இன்று (15.04.2024) வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.