» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பைக் மீது அரசு பஸ் மோதல்: சிறுவன் உயிரிழப்பு

திங்கள் 15, ஏப்ரல் 2024 8:25:46 AM (IST)

கோவில்பட்டியில் அரசுப் பேருந்தும் பைக்கும் மோதியதில் சிறுவன் உயிரிழந்தாா். மற்றொருவர் காயம் அடைந்தார். 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி இலுப்பையூரணி, மறவா் காலனியைச் சோ்ந்தவர் முனியசாமி மகன் துரைமுருகன் (17). அதே பகுதியைச் சோ்ந்தவர் மு. காா்த்தீஸ்வரன் (17). இவர்கள் இருவரும் நேற்று தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த அரசு பேருந்து பைக் மீது மோதியது.

இதில், பைக்கை ஓட்டிச் சென்ற துரைமுருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பின்னால் அமா்ந்திருந்த காா்த்தீஸ்வரன் காயமடைந்தாா்.  அவா் தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து  கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து, அரசுப் பேருந்து ஓட்டுநரான அருண் பிரகாஷ் (53) என்பவரிடம் விசாரித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து

பைக்Apr 15, 2024 - 10:51:36 AM | Posted IP 172.7*****

ஓட்ட வயது வரம்பு இருக்கு.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory