» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

லாரியில் இருந்து தவறி விழுந்த லோடு மேன் பலி!

ஞாயிறு 14, ஏப்ரல் 2024 12:00:28 PM (IST)

தூத்துக்குடியில் லாரியில் இருந்து தவறி விழுந்த லோடு மேன் பரிதாபமாக இறந்தார். 

தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரம் 6வது தெருவைச் சேர்ந்தவர் அருணாச்சலம் மகன் உதயகுமார் (46). இவர் லாரியில் லோடுமேனாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 12ஆம் தேதி தூத்துக்குடி ஜிசி ரோட்டில் லாரியை ஓரமாக நிறுத்திவிட்டு லாரி மேல் தார்ப்பாய் போட்டு கட்டிக் கொண்டு இருந்தாராம். 

அப்போது எதிர்பாராத விதமாக கால் தவறி லாரியிலிருந்து கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து மத்திய பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அலெக்ஸ்ராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory