» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா : கனிமொழி, அமைச்சர்கள் மரியாதை!

ஞாயிறு 14, ஏப்ரல் 2024 11:48:18 AM (IST)



தூத்துக்குடியில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு திமுக வேட்பாளர் கனிமொழி மற்றும் அமைச்சர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தூத்துக்குடியில் சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் 133வது பிறந்த நாளை முன்னிட்டு தென்பாகம் காவல் நிலையம் அருகில் உள்ள அவருடைய முழு உருவ சிலைக்கு தூத்துக்குடி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சமூக நலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் மீன்வளம் மற்றும் மீனவர் நலன் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இந்நிகழ்ச்சியில், துணை மேயர் ஜெனிட்டா, வடக்கு மாவட்ட திமுக அவைத் தலைவர் செல்வராஜ், மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மாநகராட்சி மண்டல தலைவர்கள் கலைச்செல்வி, திலகராஜ், அன்னலட்சுமி, கோட்டுராஜா, நிர்மல் ராஜ், பால குருசாமி கவுன்சிலர்கள் ராமகிருஷ்ணன், சுரேஷ்குமார், இசக்கி ராஜா, கீதா முருகேசன், தூத்துக்குடி மாவட்ட மீனவர் அணி செயலாளர் அந்தோணி ஸ்டாலின், மாநகர வழக்கறிஞர் அணி அமைப்பாளர் வழக்கறிஞர் ஜே எஸ் ரூபஸ் அமிர்தராஜ், போக்குவரத்து தொழிலாளர் முன்னேற்ற சங்கம் மரியதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

அதிமுக சார்பில் 



தூத்துக்குடியில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாநில வர்தக அணிச் செயலாரும் முன்னள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன், அமைப்புச் செயலாளர் சின்னத்துரை, தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்நிகழ்வில் அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி, அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் இரா.ஹென்றி, மாநில வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் டி.எம்.பிரபு, முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் இரா.சுதாகர், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர்கள் எம்.பெருமாள், மாவட்ட இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர் ஜெ.ஜெ.தனராஜ், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன், டேக் ராஜா, பில்லா விக்னேஷ், கே.ஜெ.பிரபாகர், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் திருச்சிற்றம்பலம், பகுதி கழக செயலாளர்கள் சேவியர், முருகன், ஜெய்கணேஷ், சுடலைமணி, சென்பகசெல்வன், முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory