» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பிரச்சார பணிகள் மந்தம்: அதிமுக தொண்டர்கள் சோர்வு?

வியாழன் 11, ஏப்ரல் 2024 10:17:34 AM (IST)

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் அதிமுக கட்சித் தலைமை, சரியான முறையில் கவனிக்கவில்லை என்று தொண்டர்கள் சோர்வுடன் இருப்பதாக கூறப்படுகிறது. 

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்றது வருகிறது. தூத்துக்குடி தொகுதியில் நான்கு முனைப் போட்டி நிலவினாலும், திமுக-அதிமுக இடையேயான போட்டிதான் கடுமையாக உள்ளதாக கருதப்படுகிறது. கடந்த முறை இருந்த அதே கூட்டணி பலத்தோடு கனிமொழி களத்தில் இருக்கிறார். ஆனால், எதிர்தரப்பு அதிமுக தலைமையில் ஒரு அணியாகவும், பாஜக தலைமையில் ஒரு அணியாகவும் இரண்டாக பிரிந்து நிற்கின்றன.

2-வது முறையாக வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்போடு போட்டியிடும் கனிமொழிக்காக, மாநில அமைச்சர்கள் கீதாஜீவனும், அனிதா ராதாகிருஷ்ணனும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். நான்குமுனைப் போட்டி நிலவினாலும், இரு கழகங்களுக்கு இடையேயான போட்டிதான் தீவிரமாக இருக்கிறது. 

இந்நிலையில், தூத்துக்குடி தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபடும் தொண்டர்களுகளை அதிமுக கட்சித் தலைமை, சரியான முறையில் கவனிக்கவில்லை கூறப்படுகிறது. இது தாெடர்பாக அதிமுக மூத்த தொண்டர் ஒருவர் கூறுகையில், "தூத்துக்குடி தொகுதியில் அ.தி.மு.க. வினர் தேர்தல் பிரச்சாரத்தில் பணியாற்றும் தொண்டர்களை கவனிப்பதில்லை. பூத் கமிட்டிதேர்தல் பொறுப்பாளர்கள் காற்று இறக்கிய பலூன்போல சுருங்கி விட்டதால் பணியில் சுணக்கம் காணப்படுகிறது. டீ, காபிக்கு ஏங்கும் பரிதாப நிலையில் தொண்டர்கள் உள்ளனர்.

நாடாளுமன்ற வேட்பாளர் பெரிய கோடீஸ்வரர் ஸ்வீட் பாக்ஸ்க்கு பஞ்சம் இருக்காது பேசிவந்த நிலையில், தற்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. தி.மு.க.வில் கோஷ்டி பூசல் இலைமறைவாக உள்ளது. அ.தி.மு.க.வில் ஓபனாக தெரிகிறது. அ.தி.மு.க. வினருக்கு ஸ்வீட் பாக்ஸ் (பணம்) போதிய அளவு வேட்பாளர் வழங்க முன்வரதால் வெற்றி கனி மாறிவிடும் ஏற்பட்டது. 

தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா தூத்துக்குடி புரோகிராம் கேன்சல் செய்து விட்டாராம். வேட்பாளர் தே.மு.தி.க.வினருக்கு ஸ்வீட் பாக்ஸ் இறக்கிவிடவில்லை புகார் சென்றதாம். அ.தி.மு.க.வினரும் தங்கள் பங்கிற்கு ஓலையை தலைமைக்கு தட்டிவிடுகின்றனர். தலைமை கண் திறந்தால் வேட்பாளர் ஸ்வீட் பாக்ஸ் அள்ளிவீசுவார். வெற்றி கனி யார் கையில் உள்ளது பார்ப்போம் என்று புலம்பி வருகின்றனர். 


மக்கள் கருத்து

NameApr 13, 2024 - 06:52:39 AM | Posted IP 162.1*****

Olunga vela parunga pa dec masam vellam yengala soothuku alaya vitatha marakana makkal olunga ittu podunga pa

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory