» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் வழிப்பறியில் ஈடுபட்ட6 பேர் கைது

வெள்ளி 29, மார்ச் 2024 4:33:02 PM (IST)

தூத்துக்குடியில் வழிப்பறியில் ஈடுபட்ட 6 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தூத்துக்குடி அண்ணாநகர் 4வது தெருவைச் சேர்ந்த ஒரு வாலிபர் அந்த ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார் அப்போது 6 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து அவரிடம் பணம் கேட்டு தகராறு செய்தனர். அவர் பணம் இல்லை என்று கூறியதால் அரிவாளைக் காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து அந்த வாலிபர் தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர்  முகிலரசன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். 

விசாரணையில் தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த முத்துராஜ் மகன் மூர்த்தி (25), சுப்பையா முதலியார் புர‌த்தை சேர்ந்த சுடலைமணி மகன் அஜித் குமார் (27), ராஜகோபால் நகரை சேர்ந்த சங்கரலிங்கம்மகன் கண்ணன் (24), கே.வி.கே நகரை சேர்ந்த கண்ணன் மகன் கார்த்திக் (24), டுவிபுரத்தை சேர்ந்த சாமுவேல் மகன் தவசிமணி (24), அண்ணா நகர் 11வது தெருவை சேர்ந்த சண்முகவேல் மகன் சத்தியசீலன் (21) ஆகிய 6 பேரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory