» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காதல் விவகாரத்தில் வாலிபரை தாக்கி கொல்ல முயற்சி: 5பேர் கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு!!

சனி 27, ஏப்ரல் 2024 11:18:00 AM (IST)

மணியாச்சி அருகே காதல் விவகாரத்தில் வாலிபரை இரும்பு கம்பியால் தாக்கி கொல்ல முயன்ற 5பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி அருகே உள்ள சீவலப்பேரி கிராமம், அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முப்பிடாதி மகன் சின்னத்துரை (26). இவர் ஒரு பெண்ணை காதலித்து வருகிறார். அவரது காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், நேற்று சின்னத்துரை புளியம்பட்டி ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது 5பேர் கும்பல் அவரை வழிமறித்து இரும்பு கம்பியால் சராமாரியாக தாக்கினார்களாம். இதில் காயம் அடைந்த சின்னத்துரை நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக புகாரின் பேரில் நாரைக்கிணறு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மூக்கன் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்துள்ளார். மருதன் வாழ்வு கிராமத்தை சேர்ந்த ஜெயமுருகன் மகன் அருண் (24) உட்பட 5பேரை போலீசார் தேடி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory