» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தேர்தலில் பிஜேபிக்கு தக்க பாடம் புகட்ட‌ வேண்டும் : அமைச்சர் கீதாஜீவன்பெச்சு!

வெள்ளி 29, மார்ச் 2024 11:37:56 AM (IST)



தேர்தல் நேரத்தில் நாடகமாடும் அதிமுக, பிஜேபிக்கு தக்க பாடம் புகட்டும் வகையில் பணியாற்ற வேண்டும் என தோ்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதாித்து முள்ளக்காடு, முத்தையாபுரம், பொட்டல்காடு, பொியசாமிநகர், எம்.ஜி.ஆா்நகர், சத்யாநகர், ராஜபாண்டி நகா், ஆகிய பகுதிகளில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 

அப்போது அவர் பேசுகையில், திமுக ஆட்சி அமைந்தபின் கலைஞர் வழியில் தளபதியார் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் திராவிட மாடல் ஆட்சியை சிறப்பாக செய்து வருகிறார். ஆனால் தமிழகத்திற்கு எதிரான நீட் தேர்வு குடியுாிமை சட்டம் உணவு பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட பலசட்டங்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி தலையாட்டி பொம்மையாக இருந்து கொண்டு ஆதரித்தார். இப்போது பிஜேபியுடன் தொடர்பு இல்லை என்று சொல்லி இரண்டு பேருமே நாடகமாடி மக்களை ஏமாற்ற வருவார்கள் அதற்கு இடம் அளிக்க கூடாது.

நமது ஆட்சியின் சாதனைகளை வீடுகள் தோறும் எடுத்துச்சென்று கட்சிக்கும் ஆட்சிக்கும் வலிமை சேர்க்க வேண்டும் வரும் நாடாளுமன்ற தோ்தலில் திமுகவை எதிர்த்து நிற்கும் கட்சிகளுக்கு டெபாசிட் கிடைக்க கூடாது. அந்த அளவிற்கு உங்களது களப்பணிகள் சிறப்பாக அமைய வேண்டும்.  அனைத்து அணிகளும் ஓட்டு மொத்தமாக இணைந்து பணியாற்ற வேண்டும். வரும் நாடாளுமன்ற தோ்தலில் கனிமொழி எம்.பி மீண்டும் போட்டியிடுகிறாா்கள்.  கடந்த முறை பெற்ற வெற்றியை விட இந்த முறை மிகப்பொிய வெற்றியை 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ஈட்டி தருவதற்கு பணியாற்றி முதல்வாின் கரத்தை வலுப்படுத்த வேண்டும்.

அதே போல் கடந்த ஆண்டு எதிர்பாராமல் பெய்த கனமழையால் ஏற்பட்ட வௌ்ள பாதிப்பின் போது எல்லா தரப்பினருக்கும் நாம் ஓவ்வொரு வகையிலும் உதவிகள் செய்து மக்கள் நலன் தான் முக்கியம் என்று பணியாற்றியுள்ளோம். என்பது பொதுமக்களுக்கு ெதாியும் அதிமுக பிஜேபி கட்சிகளுக்கு வரும் தோ்தலில் சாியான பாடம் புகட்ட வேண்டும் என்று பேசினார். 

மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி மண்டலத்தலைவர் வக்கீல் பாலகுருசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் சண்முகம், சிபிஎம் செயற்குழு உறுப்பினர் அர்ஜீனன், மாநகர மதிமுக செயலாளர் முருகபூபதி, மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன், மாநகர திமுக இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் சூர்யா, மற்றும் மணி, அல்பட், உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

ஏமாந்த சாமான்யன்Mar 30, 2024 - 02:06:53 PM | Posted IP 172.7*****

இனி திருட்டு திமுகவிற்கு வாக்களிக்கமாட்டோம். இப்படிக்கு ஏமாந்த சாமான்யன்

இந்தியன்Mar 29, 2024 - 06:37:16 PM | Posted IP 172.7*****

அது திருப்பி திமுகவுக்கு தான்

TamilanMar 29, 2024 - 01:32:24 PM | Posted IP 162.1*****

BJP இந்த தேர்தலில் தமிழகத்தில் மிக பெரிய வாக்கு சதவீதம் பெரும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory