» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் வங்கி ஊழியருக்கு கத்திக்குத்து : தந்தை, மகனுக்கு போலீஸ் வலை!

வெள்ளி 29, மார்ச் 2024 8:39:52 AM (IST)

தூத்துக்குடியில் தனியார் வங்கி ஊழியரை கத்தியால் குத்திய தந்தை, மகனை போலீசார் தேடி வருகின்றனர். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி பிரையண்ட்நகர் 13-வது தெருவை சேர்ந்தவர் சிவக்குமார் (29). இவர் தனியார் வங்கியில் பணியாற்றி வருகிறார். இவர் பணியாற்றும் வங்கியில் தூத்துக்குடி சங்கராபுரத்தில் ஓட்டல் நடத்தி வரும் பழனிகுமார் (54) என்பவர் கடன் வாங்கி இருந்தாராம். இந்த கடன் தொகையை சரிவர திருப்பி செலுத்தாமல் இருந்தாராம். 

இதனால் கடனை முறையாக திருப்பி செலுத்துமாறு சிவக்குமார் கூறினாராம். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த பழனிகுமார், அவரது மகன் சியாம் (21) ஆகியோர் சிவக்குமாரை கத்தியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த சிவக்குமார் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி மத்தியபாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பைக் விபத்தில் ரேஷன் கடை ஊழியர் பலி

ஞாயிறு 28, ஏப்ரல் 2024 10:04:21 AM (IST)

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory