» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மனைவி பிரிந்து சென்றதால் மீனவர் தூக்கு போட்டு தற்கொலை

ஞாயிறு 28, ஏப்ரல் 2024 10:23:48 AM (IST)

தூத்துக்குடியில் மனைவி பிரிந்து சென்றதால் மீனவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி இனிகோ நகரை சேர்ந்தவர் அருள்ராஜ் மகன் பிரபாகரன் (39). மீனவரான இவருக்கு திருணமாக மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இவர் தினசரி மதுபோதையில் வீட்டுக்கு செல்வதால் கணவன் மனைவிக்குள் தகராறு ஏற்பட்டதாம். 

இதனால் அவரது மனைவி குழந்தைகளை அழைத்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டாராம். இதில் மனம் உடைந்த பிரபாகரன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்

மற்றொரு சம்பவம் 

தூத்துக்குடி முள்ளக்காடு காமராஜ் நகரைச் சேர்ந்தவர் பாண்டியன் மகன் கணேஷ் குமார் (46). இவருக்கு மனைவியும் மூன்று மகன்களும் உள்ளனர். இவர் ரூ.30 லட்சம் கடன் வாங்கி வீடு கட்டினாராம். ஆனால் கடன் தொகையை திருப்பி செலுத்த முடியவில்லையாம். இதனால் வீட்டை விற்கும் சூழ்நிலை ஏற்பட்டதாம்.

இதனால் மனமுடைந்த கணேஷ் குமார் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில் வேல் குமார் சம்பவ இடத்திற்கு சென்று இவரது சடலத்தை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory