» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கள்ள நோட்டு வழக்கில் முதியவருக்கு 10 ஆண்டு சிறை

ஞாயிறு 28, ஏப்ரல் 2024 10:01:34 AM (IST)

கோவில்பட்டியில் கள்ள நோட்டு வழக்கில் முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவில்பட்டி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஒரு பங்களாவில் கடந்த 2000-ம் ஆண்டு கள்ள நோட்டுகள் அச்சடிக்கப்படுவதாக கிழக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் நடத்திய திடீர் சோதனையில் தூத்துக்குடியை சேர்ந்த மூர்த்தி என்ற குருமூர்த்தி (65) மற்றும் ரமேஷ், நித்தியதரன், ஜெயக்குமார், மணி ஆகியோர் கள்ள நோட்டுகள் அடித்து புழக்கத்தில் விடுவது தெரியவந்தது.

இதுதொடர்பாக குருமூர்த்தி உள்ளிட்ட 5 பேர் மீதும் 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். மேலும் அங்கிருந்த கள்ள நோட்டுகள் 1 லட்சத்து 63 ஆயிரத்து 790-ஐயும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்த வழக்கு விசாரணை கோவில்பட்டி சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் குருமூர்த்தி தவிர மற்ற அனைவரும் இறந்துவிட்டனர். 

வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் விசாரித்து குற்றச்சாட்டப்பட்ட குருமூர்த்திக்கு 2 பிரிவுகளில் தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சம்பத்குமார் ஆஜரானார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory