» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கடலில் தவறி விழுந்த மீனவர் பலி : பராமரிப்பு பணியின்போது சோகம்!

ஞாயிறு 28, ஏப்ரல் 2024 10:12:29 AM (IST)

தூத்துக்குடியில் விசைப்படகில் பராமரிப்பு பணி செய்தபோது கடலில் தவறி விழுந்த மீனவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

தூத்துக்குடி மினிசகாயபுரத்தைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் மகன் சேசு (26). மீனவரான இவர் நேற்று காலையில் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் உள்ள விசைப்படகில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது சேசு எதிர்பாராதவிதமாக கடலில் தவறி விழுந்தார். இதில் தண்ணீரில் மூழ்கிய அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் பரிதாபமாக இறந்தார்.

இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சக மீனவர்கள் தீயணைப்பு நிலையத்துக்கும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, கடலில் மூழ்கி இறந்த சேசுவின் உடலை மீட்டனர். அவரது உடலை தருவைகுளம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கைப்பற்றி பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory