» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ரோட்டரி சங்கத்தில் மாவட்ட ஆளுநர் ஆய்வு!

வியாழன் 28, மார்ச் 2024 3:45:04 PM (IST)



தூத்துக்குடி டைட்டன்ஸ் ரோட்டரி சங்கத்தின் செயல்பாடுகளை மாவட்ட ஆளுநர் முத்தையா பிள்ளை ஆய்வு செய்தார்.

ஒவ்வொரு வருடமும் ரோட்டரி சங்கங்களின் செயல்பாடுகளை மாவட்ட ஆளுநர் ஆய்வு செய்வது வழக்கம்.தூத்துக்குடி டைட்டன்ஸ் ரோட்டரி சங்கத்திற்கு மாவட்ட ஆளுநரின் அதிகாரப்பூர்வ வருகையை முன்னிட்டு மாவட்ட ஆளுநர் முத்தையா பிள்ளை சங்கத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்து  ஆலோசனை வழங்கினார்.

இதில் ரோட்டரி சங்க புதிய உறுப்பினர்களாக முத்துகிருஷ்ணன், சிவசுப்பிரமணியன் ஆகியோர் இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி டைட்டன்ஸ் ரோட்டரி சங்க தலைவர் பழனிச்சாமி தலைமை வகித்து அனைவரையும் வரவேற்றார். மாவட்ட உதவி ஆளுநர் முத்துச்செல்வன்,மாவட்டச் செயலாளர் ஆறுமுகப்பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க செயலாளர் ரஞ்சித் நடேஷ் ஆண்டறிக்கை வாசித்தார்.

ரோட்டரி மாவட்ட ஆளுநர் முத்தையா பிள்ளை கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இதில் கோவில்பட்டி ரோட்டரி சங்க நிர்வாகிகள் நாராயணசாமி, முத்துமுருகன், ரோட்டரி மாவட்ட முன்னாள் துணை ஆளுநர்கள் பாலமுருகன், ராதாகிருஷ்ணன் உள்பட ரோட்டரி சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ரோட்டரி சங்க உறுப்பினர் மகேஷ் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory