» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அருகே வாலிபர் வெட்டிக் கொலை : மர்ம நபர்கள் வெறிச்செயல்!

திங்கள் 25, மார்ச் 2024 8:06:36 AM (IST)

தூத்துக்குடி அருகே முள்ளக்காடு பகுதியில் வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி முள்ளக்காடு ராஜீவ் நகா் பகுதியைச் சோ்ந்தவா் முனியசாமி (45). கூலித் தொழிலாளியான இவா், முள்ளக்காடு சாமிநகா் பகுதியில் நேற்று மாலை சைக்கிளில் சென்றாராம். அப்போது, அவரை மா்ம நபா்கள் 2 போ் அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பியோடினராம். 

இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலில் பேரில் முத்தையாபுரம் போலீஸாா் சென்று, சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா்; மேலும், வழக்குப் பதிந்து, குற்றவாளிகளைத் தேடி வருகின்றனா். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory